Sunday 20 January 2013

அண்ணமார் சாமி கதை

அண்ணமார் சாமி கதை (பொன்னர் – சங்கர்) - வீரப்பூர் கொங்கு நாடு என்பது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு காவிரியின் கரையினை ஒட்டிய கரூர் – திருச்சி சாலையில் அமைந்துள்ள அமராவாதி ஆற்றினை உள்ளடக்கிய நாடாகும். இந்த கட்டுரையில் நாம் சொல்லும் மாந்தர்களின் தாய் மற்றும் தந்தையின் சபதத்திலிருந்து தொடங்கி தங்கையின் அழுகை வாயிலாக முடிகிறது. இந்த கதையினை நமது முதல்வர் அவர்கள் புத்தக வடிவில் “பொன்னர் சங்கர்” என்று எழுதி இருப்பதன் மூலம் இக்கதையின் சிறப்பினை நாம் அறிய முடியும். இந்த கதையினை தற்சமயம் நடிகர் பிரசாந்த் நடித்து
தயாரிக்க கதை வசனத்தை முதல்வரே கையாண்டுள்ளார். அத்தை மகனை மசையன் என தெரிந்தும் கணவனாக ஏற்றுக்கொண்ட நாச்சியாரின் குழந்தைகளே பொன்னரும் சங்கரும். இந்த கதை நடந்த இடமாக கருதப்படும் வீரப்பூரில் வருடம் தோரும் மாசி மாதம் நடைபெறும் திருவிழா காண கண்கோடி வேண்டும். 7 நாட்கள் நடக்கும் இவ்விழாவிற்கு வரும் அனேகரும் அந்த 7 நாட்களும் அங்கேயே தங்கி இருப்பர் எனப்து குறிப்பிடத்தக்கது. இலட்சக்கணக்கில் கூடும் கூட்டம் என அந்த இடமே திமிலோகப்படும். (இன்றும் கொங்கு வேளாளர் வீட்டில் பெண்குழந்தைகளை ’தங்கம்’ என்றே அழைப்பதை நான் பார்த்திருக்கிறேன்) கரூரில் சில அன்பர்கள் சேர்ந்து “அண்ணன்மார் அன்னதானக்குழு” என்கிற பெயரில் இந்த திருவிழாவின் முக்கிய நாளாக வேடபரி அன்று அன்னதானம் வழங்குவர். அந்த குழுவில் அடியேனும் ஒருவனாக இருந்து கடந்த 5 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறேன். சுமார் 5000 பேருக்கும் உணவளிக்கும் வண்ணம் உணவு தயார் செய்யப்பட்டு டெம்போ வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டு வினியோகிப்படும். 5000 பேருக்கு சாப்பாடு என்றவுன் ஒரு நாள் முழுவதும் உணவளிக்கப்படும் என்று நினைக்காதீர்கள் நண்பர்களே. வெறும் ஒரு மணி நேரத்தில் அந்த உணவு வழங்கப்பட்டு காலியாகிவிடும். இந்தக்கதை ரொம்ப பெருசு என்பதாலும் தட்டச்சு செய்ய ஆகும் கால நேரத்தை நினைவில் கொண்டு மூலக்கதையை இணையத்தில் நட்பூ வலைத்தளத்திலிருந்து பெற்று உங்களுக்கு அளித்துள்ளேன். இதோ அந்தக்கதை: இரா.கிருபாகரன் கொங்குப்பகுதியில் வழங்கப்பட்டு வரும் முக்கியமான கதைப்பாடல் ‘குன்னடையான் கதை’ என்றும் ‘அண்ணன்மார் கதை’ என்றும் அழைக்கப்படும் கதைப்பாடலாகும். இக்கதையின் பல்வேறு கூறுகள் நாட்டார் வழக்காறுகளில் இடம்பெற்றுள்ளன. கொங்கு வேளாளர் தலைவர் களாக விளங்கிய பொன்னர், சங்கர் என்னும் இரு சகோதரர்களின் வரலாற்றைக் கூறும் வீரப்பாடல் இது. இவர்களுக்கு அருக்காணித் தங்கம் என்னும் தங்கை ஒருத்தி, கதையின் முக்கிய பகுதி இந்தத் தங்கையின் நோக்கிலிருந்தே நகர்கின்றது. கதையின் இறுதிக் கட்டமான படுகளம் அருக்காணித் தங்கத்தை மையமாகக் கொண்டது. கதைத் தலைவர்களாகிய பொன்னர், சங்கர் இருவரும் அண்ணன்மார் என்று அழைக்கப்படுவதும் தங்கையின் நோக்கில் இருந்துதான். தன் அண்ணன்களைப் பெரியண்ணன், சின்னண்ணன் என்று அருக்காணித் தங்கம் அழைக் கிறாள். இக்கதையை மக்கள் வழக்கில் ‘சின்ன அண்ணன் பெரியண்ணன் கதை’ என்று குறிப்பிடு கின்றனர். அதுவே ‘அண்ணன்மார் சாமி’யாகி யுள்ளது. பொன்னர்-சங்கர் திருச்சிக்கும் கரூருக்கும் இடையிலான பொன்னிவளநாட்டை ஆண்டனர். கொங்கு வேளாளர் சமுதாயம் அண்ணன்மாரின் பெயரைக் குழந்தைகளுக்கு வைக்கும் வழக்கம் பெரும்பான்மையாக உள்ளது. பொன்னர், சங்கர் ஆகிய அவர்களது இயற்பெயர் அவ்வளவாக வழங்கப் பெறுவதில்லை. பெரியசாமி, சின்னசாமி, பொன்னையன், சின்னையன் ஆகியவை இப் பகுதியில் மிகுதியாகச் சூட்டப்படுகின்றன. பெரிய அண்ணன் என்னும் பெயரும் வழங்குகின்றது. இவை பொன்னர், சங்கர் ஆகிய இருவரையும் குறிக்கும் பெயர்களே ஆகும். இரட்டைக் குழந் தைகள் ஆண்களாகப் பிறக்கும் என்றால் இந்தப் பெயர்களை அக்குழந்தைகளுக்குச் சூட்டுவது பெருவழக்கு. அருக்காணி, தங்கம், தங்கம்மாள் ஆகிய பெயர்கள் பெண்களுக்குச் சூட்டப்படுகின்றன. இக்கதையில் வரும் பிற பாத்திரங்கள் பெயர் களாகிய ராக்கியண்ணன், முத்தாயி, பவளாயி, பாவாயி முதலிய பெயர்களையும் மக்கட் பெயர் களில் காணலாம். அண்ணன்மாரின் தந்தையாகிய குன்னடையானை இக்கதைப்பாடல் ‘மசையன், மசச்சாமி, மசக்கவுண்டன்’ என்றெல்லாம் குறிப்பிடும். அவரது குணத்திற்கு உவமையாக ‘வெள்ளைச் சோளம்’ என்றும் கதை கூறும். இவையெல்லாம் ‘வெகுளி’ என்னும் பொருள் கொண்டவை. பங்காளிகளின் சூழ்ச்சிகளை எல்லாம் அறியாமல் எல்லாரையும் நம்பிவிடும் அவரது குணத்தை விவரிக்க இத்தகைய சொற்கள் கையாளப்படுகின்றன. இவை இன்று மக்கள் வழக்கிலும் உள்ளன. எதையும் நம்பி விடும் குணமுள்ள, விவரமில்லாத ஆட்களுக்குப் பட்டப் பெயர்களாக ‘மசையன்’ உள்ளிட்டவை வழங்கு கின்றன. இப்பகுதியில் வழங்கிவரும் விடுகதை ஒன்றும் முக்கியமானது. ‘பெரியண்ணன் வேட்டிய மடின்னாலும் மடிக்க முடியாது சின்னண்ணங் காச எண்ணுனாலும் எண்ண முடியாது’ என்பது அப்பழமொழி. வானம், விண்மீன்கள் என்பன இதற்கு விடை. இதில் பெரியண்ணன், சின்னண்ணன் என்று வருபவை அண்ணன்மாரைக் குறிப்பவையே. இந்த விடுகதையின் பிற வடிவங்களும் உள்ளன. ஆனால் கொங்குப் பகுதியில் குறிப்பாகக் கொங்குவேளாளர் வழக்கில் இந்த வடிவமே காணப்படுகின்றது. மக்கள் வழக்கில் அண்ணன்மார் கதை எந்த அளவு இரண்டறக் கலந்திருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள். இவற்றால் அக்கதையின் செல்வாக்கு பிடிபடுகிறது.
ஆனால் இக்கதை அடிப்படையில் உருவாகியுள்ள பழமொழிகள் சில உள்ளன. அவற்றைக் கதை கூறும் வரலாற்றோடு தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். இக்கதையின் முதற்பகுதி அண்ணன் மாரின் பெற்றோராகிய குன்னடையான் தாமரை நாச்சி ஆகியோரின் அவல வாழ்வையும் அவர் களுக்குப் பங்காளிகளே எதிரிகளாக விளங்கு வதையும் காட்டுகின்றது. கதையின் பின்பகுதி வேளாளர் தலைவர்களாகிய பொன்னரும் சங்கரும் வேட்டுவர் தலைவராகிய தலையூர்க் காளியுடன் வீரப்போர் புரிந்து மடிந்து போவதை விவரிக்கிறது. இக்கதைச் சம்பவங்கள் நிகழ்ந்த காலம் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு என்று கூறுகின்றனர். அப்போதிருந்து இன்றுவரை வேளாளருக்கும் வேட்டுவருக்கும் நல்லுறவு கிடையாது. ஒரே பகுதியில் வசித்தாலும் ஒருவரை ஒருவர் எதிரியாகப் பாவிக்கும் மனப்பான்மைதான் நிலவுகின்றது. இத்தொடர் பகைக்குக் காரணம் அண்ணன்மார் கதையில் வரும் சம்பவங்கள்தான். அண்ணன்மார் கதை வேளாளருக்கும் வேட்டுவருக்கும் நிகழ்ந்த சண்டை என்பதை மக்கள் இன்றும் தீவிரமாக நம்புகின்றனர். இக்கதை நிகழ்த்தப்படுதல் தொடர்பாக நிலவும் நம்பிக்கைகளை கோ.ந. முத்துக்குமாரசாமி கீழ்வருமாறு பட்டியலிடுகிறார். ‘அண்ணன்மார் கதை’ படிக்கும் இடத்திற்கு வேட்டுவர் வரலாகாது; வீரப்பூர் அண்ணன்மார் சாமி கோவில் திருவிழாவின்போது அண்ணன் மார் அனியாப்பூரில் அம்பு தொடுத்தால் வேட்டுவர் குடியில் ஒரு பிணமாவது விழும்; அண்ணன்மார் கதையை வேட்டுவர் கேட்கவே கூடாது; ஊரில் கதை நடந்தால் வேட்டுவர் காது கேளாத தூரத்திற்குச் சென்றுவிட வேண்டும்’ (ப.34). வேளாளருக்கும் வேட்டுவருக்கும் இடையே உள்ள பகைக்குக் காரணம் இக்கதைச் சம்பவங்கள் தான் என்பதை இந்த நம்பிக்கைகள் காட்டுகின்றன. இக்கதை பங்காளிச் சண்டையைத்தான் மையமாகக் கொண்டது என்று ஆய்வாளரில் ஒரு பிரிவினர் குறிப்பிடுகின்றனர். அவர்கள், அண்ணன்மாரும் வேளாளரும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான் என்னும் கருத்துடையவர்கள். ஆனால் வேளாளர் வேறு பகுதியில் இருந்து இப்பகுதிக்கு வந்து குடியேறி யவர்கள் என்னும் கருத்துடைய ஆய்வாளர்கள் அண்ணன்மார் கதை கொங்குப் பகுதியின் பூர்வ குடிகளாகிய வேட்டுவருக்கும் வேறு பகுதியில் இருந்து வந்து குடியேறிய வேளாளருக்கும் இடையே நடந்த சண்டைதான் என்று கருதுகின்றனர். இரண்டு சாதியைச் சேர்ந்த மக்கள் சில நூற்றாண்டுகளாகத் தம்முள் பகை பாராட்டி வருகின்றனர் என்றால் அதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இட்டுக் கட்டிய ஒரு விஷயம் பகையை உருவாக்கி நிலைப்படுத்திவிட்டது என்பது வெறும் சமாதானம் தான். வேளாளருக்கும் வேட்டுவருக்கும் இடையே பெரும்போர் நடந்த தாகவே ‘அண்ணன்மார் சுவாமி கதை’ தெரிவிக்கிறது. பாமரர் பரிந்து போற்றும் படுகளத் திருவிழா கிராமத்து வழிபாட்டு வடிவங்கள் இலக்கியத்தோடும் கலைகளோடும் இணைந்திருப்பது போலவே மத வழிபாட்டோடும் பிணைந்திருக்கிறது. வரலாற்று நிலவியலை மீட்டுருவாக்கம் செய்யும் இவ்வழிபாட்டு முறைகளில் பெண் தெய்வத்தின் ஆதிக்கம் அதீதமாகவே காணப்படுவதுடன், சமுதாய நோக்கில் பார்க்குமிடத்து கூட்டு வழிபாடாகவே அமைந்து இயற்கையில் ஏற்படும் பெருங்கேடுகளை தடுக்கும் அடிமன நம்பிக்கையை ஊட்டுகிறது. ஊர்திரண்ட உணர்வை வெளிப்படுத்தும் இவ்வழிபாடு வருடா வருடம் வந்து சேர்வதுடன், உழைக்குந் தொழிலாளர்களுக்கு ஓய்வையும் தருகிறது. ஒற்றுமை உணர்வின் வெளிப்பாடாக அமையும் இவ்வழிபாடு வாழ்வியலோடு ஒட்டியதொரு நிகழ்ச்சிபோக்கு மாத்திரமின்றி பண்பாட்டுக் கூறின் பக்குவமாகவும் பிரகாசிக்கின்றது. நம்பிக்கையே இங்கு நடம் புரிவதனால், அழுகையும், தொழுகையும், விரதமும் வேண்டுதலும், நேர்த்தியும் நிவர்த்தியும் முன்னுரிமை பெறுகின்றது. அந்த வகையில் மலையக இந்திய வம்சாவளி மக்களின் பின் புலத்தை கலைபண்பாட்டு வழிபாட்டுத் தடங்களை கடந்த ஒன்றரை நூற்றாண்டுக்கு மேலாக பாதுகாத்து வரும் ஒரு பாமர பாட்டாளி சமூகத்தின் நம்பிக்கை எதிர்பார்ப்புகளை, வாழ்வியல் அம்சங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் எடுத்துக்காட்டும் ஏடறியா இயல்புகளை ஆழமும் அகலமுமாக்குவதிலும் அண்ணன்மார் கதை என்ற பொன்னர் சங்கர் கதை உந்து சக்தியாக விளங்குகிறது. நாடும் நாகரீகமும் பின்னிற்கும் கலைகளில் கூத்து கலை முதன்மை பெறுவதுடன், இந்தியாவே இதன் வேரிடமாக விளங்குகிறது எனலாம். அன்பின் அடையாளமாகக் காமன் கூத்தும், அறத்தின் அடையாளமாக அருச்சுனன் தபசும் இருப்பதுபோல், வீரத்தின் விளை நிலமாக விளங்குவதே பொன்னர் சங்கர் கதையாகும். இந்தக் கலைகள் பெருந்தோட்ட மக்களை பிரகாசிக்க வைத்துள்ளது என்பதிலும் பார்க்க, கோணற்படாத வாழ்வைக் கொண்டு நடாத்தவும், கட்டுக்கோப்புக்குள் கால் பதித்து வாழவும், ஊன் கலந்த உணர்வுகளை இந்திய வம்சாவழி என்ற இன அடையாளத்தை இறுக்கப்படுத்துவதிலும் மைல் கல்லாக விளங்குகிறது. அறுபதில் அகவை ஊவா மாகாண பதுளை மாவட்ட கொஸ்லாந்தை மீரியபெத்தையில் மண்வாசனை மாறாத நிலையில் கொண்டாடப்படும் அன்றேல் நடாத்தப்படும் பொன்னர் சங்கர் கதை அறுபதாண்டுகள் வரை நடந்து வைர விழா வாசலுக்கு வந்திருப்பதே ஒரு வரலாறாகும். "வருஷா...வருஷம் வருகுதடி பொன்னர் சங்கர் கொஸ்லாந்தை மீரிய பெத்தையில் கூடுதடி கோடி சனம்...." என்று கூறும் இப்பிரதேச மக்கள் ஆண்டுக்கொரு முறை அடையும் அனுபவமே புதிராகும். தேயிலை தேசத்தின் தியாக இயந்திரங்களான மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் உழைப்புக்கு உரமூட்டுவது போலவே, கலையோடு சேர்ந்த கடவுள் வழிபாட்டுக்கும் காத்திரம் படைக்க வல்லவர்கள் என்பதை மீரிய பெத்தை தோட்ட மக்கள் தமது அறுபதாண்டு `படுகள' நிகழ்வால் மெய்ப்பித்துள்ளனரெனலாம். வரலாற்றுத் தளம் முந்தியிருந்தாலும், வாழ்க்கைத்தரம் பிந்தியிருக்கக் காணப்படும் மலையகப் பெருந்தோட்ட மக்களிடையே, நம்பிக்கைச் சடங்குகள் இன்றும் இறவாமலே இருந்து வருகின்றன. பாரதத்திலிருந்து வியர்வை சிந்த வெறுங்கையோடு வந்தவர்களென விபரிக்கப்பட்டாலும், வாழ்க்கைச் சுமையோடும், வறுமைச் சுமையோடும் வந்தவர்கள் கூடவே தமது வேராகவும் விழுதாகவும் கலைப் பண்பாட்டு அம்சங்களை பிடி மண்ணாகவே அள்ளி வந்தனர். இவ்வாறு தென்னாட்டிலிருந்து தேடி வந்த தேயிலை தோட்டத்துக்குள் நுழைந்த பெருங்கதைகளுள் ஒன்றே பொன்னர் சங்கர் கதையாகும். பொன்னி வள நாட்டு மன்னனின் வீரத்தை விதந்துரைக்கும் இக்கதை வேனிற்காலமான மாசி மாத வளர்பிறையில் ஆரம்பமாகி ஒரு மாதம் ஓடிச் சென்று நிறைவுறுகின்றது. குன்றுடையான் கதை, அண்ணன்மார் சுவாமிகள் கதை என்றெல்லாம் பெயர் பெறும் பொன்னர் சங்கர் கதை ஓர் இன மக்களின் இடப் பெயர்ச்சியையும், அவர்கள் கொங்கு நாட்டிற்கு வந்து ஆதிக்கம் பெற்ற விபரத்தையும் காட்டுகிறது. கொங்கு நாட்டு வேளாளரின் சமூகப் பண்பாடு, அவர்களின் வெள்ளை உள்ளம், உண்மைக்காக உயிர் கொடுக்கும் பண்பு என்பவைகளை அண்ணன்மார் கதை விளக்குவதுடன், பாட்டு வடிவிலமைந்த வீரப்பூர் பொன்னர் சங்கர் நூல் விளக்கம் தருகிறது. ஆர்.கருணையம்மாள் என்பவரின் நூலில் மாயலூர் செல்லாண்டியம்மனை மனக்கண்முன் நிறுத்தக் காணலாம். வரிபோட்டு வசூலித்து வரலாறு பாடும் இக்கதையின் உள்ளோட்டங்கள் இவ்வாறு உருண்டு போகக் காண்கிறோம். உண்மைக்காய் உயிரிழப்பு பொன்னுடையான் என்ற குன்னுடையான் கவுண்டருக்கும், தாமரை கவுண்டச்சியாருக்கும் பிறந்தவர்களே பொன்னர். சங்கர் மற்றும் தங்கம், மூவரும் வரத்தால் பிறந்தவர்கள் என்பதோடு, வீரபாகு சாம்பானும் இவர்களுக்கு துணையாக இருந்துள்ளான். மேலும் ஐந்து வயது நிரம்பி விபரம் பெறும் வரை அண்ணன்மார் இருவரையம் காளி தேவியரே வளர்த்தாரெனவும் சுட்டப்படுகிறது. பாம்புக்கு பல்லில் விஷம், பங்காளிக்கு உடம்பெல்லாம் விஷம் என்பதுபோல் வேளாளர்கள் பங்காளிப் பகையை பரம்பரையாக கொண்டவர்கள் என்பர். இதனால் தாயார் தாமரை தான்பட்ட இன்னல்களையும் சபதங்களையும் நினைவுபடுத்தி பொன்னர் சங்கர் இருவரிடமும் கூற, அவர்கள் பங்காளிகளை பலிவாங்கி தாயை மகிழ்விக்கின்றனர். அத்துடன், பெற்றோரின் நிலபுலங்களை மீட்க சோழராஜனின் மேலை நாட்டை கைப்பற்றுவதாகவும் கதை கூறுகிறது. பொன்னரும் சங்கரும் போருக்கு செல்லும் வேளையிலேயே, தாயும் தந்தையும் இறந்து விடுகின்றனர். இவர்களது இறப்பிற்கு பின்னரேயே திருமணம் செய்வதுடன், தாயின் சபதத்துக்காக மனைவியரை சிறையிட்டதாகவும் கதைத் தொடர்கிறது. பொன்னரும் சங்கரும் சோழன் ஆதரவால் வளநாட்டுக்கு உரிமை பெற்ற காவலர்களாக இருக்கின்றனர். நங்காள் எனப்படும் தங்காள் கிளி கேட்க, தங்கைக்காக அவர்கள் அன்னக்கிளி கொண்டு வர வீரமலை காட்டுக்கு போவதை,"நாகமலை தோகை மலை நாலுபக்க வீரமலை வீரமலை நடுவினிலே.... எனத் தொடரும் பாடல்கள் புலப்படுத்துவதுடன், காட்டில் சங்கர் அறுபதடி வேங்கையை வெட்டுகிறார். இதனால் தலையூர் காளி கோபமுற்று கூத்தாளை நாட்டைத் தாக்கி குப்பாயியை சிறையெடுத்துப் போகிறாள். பொன்னரும் சங்கரும் குப்பாயியை மீட்க தற்கொலை செய்து கொள்கிறார்கள். பொன்னரும் சங்கரும் சாம்பானும் வேடுபடையோடு மோதி இறக்கின்றனர். அரண்மனையில் தனியாய் வசித்தத் தங்காள் அன்னியர்களை அழைக்க, அவர்கள் மறுத்து பட்டணம் போய் விடுகின்றனர். அரண்மனையில் தனியாக தங்காள் ஒப்பாரி வைத்து அழுகிறாள். உயிர் பிச்சை கேட்டு புலம்பும் அவள் படுகளம் போய் புலம்புகிறாள். பொன்னர் சங்கர் இறந்ததே படுகளம் எனப்படுகிறது. அதன் பின் தண்ணீர் எடுத்தெளித்து பிரம்பால் தட்டுமாறு கூற, தங்காள் அவ்வாறே செய்ய இறந்தவர்கள் உயிர்பெற்று அமரராகின்றனர். இதனால் தான் `கொங்குமலிந்தால் எங்குமலியும்' என்ற பழமொழி கொண்ட அந்த நாட்டின் முழுதும் பரவியுள்ள கதைப்பாடல் வரிகளில், " ஒக்கப் பிறக்கணுமா - அண்ணா ஒரு முலைப் பால் உண்கணுமா கூடப் பிறக்கணுமா? அண்ணா கூட்டுப்பால் உண்கணுமா என்ற சகோதரப் புலம்பல் தொடர்வதை காண்கிறோம். இதன் அடியொட்டிய அத்தனை விடயங்களும் இன்றும் மீரியபெத்தை படுகளத்தில் மறுவடிவமாக்கப்படுகிறது. நேர்த்தியும் நிவர்த்தியும் மீரியபெத்தை ஆலயத்தை நம்பி நாட்டின் நாலாபுறமிருந்தும் வரும் அடியார்கள் பல வேண்டுதல்களை வேள்விகளாக வைக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களாக இருப்பவர்கள் குடிக்கு அடிமையானவர்கள், குழப்பம் இழைப்பவர்கள் என்றெல்லாம் முத்திரை குத்தும் பலரின் முகத்திரையை கிழிப்பதில் கொஸ்லாந்தை மீரியபெத்தை தோட்ட மக்கள் பலே கெட்டிக்காரர்கள். பெரியகாண்டி அம்மன் பேரில் (தங்காள்) பெருவிழாவும் கதை படிப்பும் ஆரம்பமானதும் மது, மாமிசம் மறைந்து விடுகிறது. அந்திபட்டதும் அண்ணன்மார் கதை கேட்கவேண்டுமென்ற ஆவலில் பெரியோர் முதல் சிறியோர் வரை அமைதியாக ஆலயத்தில் கூடுகின்றனர். வருத்தம் வந்தால் கூட வைத்தியத்தை விட ஆலயத்தின் விபூதி, தீர்த்தத்தை விரும்பிப் பெறுகின்றனர். எவரேனும் ஒரு பொருளை தவறவிட்டால் கூட அதை கோவில் பூசகர் மூலம் மீட்டுக்கொடுக்கும் நல்ல பண்பும் பக்தியும் காணப்படுகின்றதென்றால், மக்களை காக்கும் மகாமுனி என்ற தெய்வத்தின் மீது அவர்கள் கொண்ட தீராத பற்றே அதற்கு காரணமாகும். படுகளம் வந்த பலர் விட்டுச் சென்றுள்ள விலாசங்கள் தேசமுழுவதுக்கும் இத்திருவிழா தெரிந்துள்ளதை மெய்ப்பிக்கிறது என உணரலாம். ஆற்றங்கரையோரம் அமைதியான சூழல், ஆயிரமாயிரமாய் அணி திரண்டாலும் அன்னதான ஆகார வசதிகள், ஏழை செல்வந்தன் என்று பேதமின்றி வந்து வழிபடும் இவ்வாலயத்தில் படுகளத் திருவிழாவை ஆரம்பித்து வைத்த பெருமை கருப்பண்ணபிள்ளை நல்லுசாமி கவுண்டரையே சாரும். திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் அண்ணமார் சாமி, கன்னிமாரம்மன் என்றழைக்கப்படும் பெரியகாண்டியம்மன், பொன்னர், சங்கர், தங்காள், மத்திரம் காத்த மகாமுனி, மாசி கருப்பண்ண சாமி, ஆகிய கோவில்கள் உள்ளது. “தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் அண்ணமார் சாமி கோவில் நிறைய உள்ளது. குல தெய்வமாகவும் அண்ணமார் சாமி உள்ளது.” தமிழ்கத்தின் எல்லா மாவட்டங்களிலும் இருந்து பக்தர்கள் வீரப்பூர் வந்து பொங்கல் வைத்து பூஜை செய்து வேண்டுதல்களை நிறைவேற்றுவதும் தினமும் வழக்கமாக நடைபெற்று வருகின்றது. ஆண்டுதோறும் மாசி மாதம் கன்னிமாரம்மன் கோவில்களின் மாசிப்பெருந்திருவிழா நடைபெறும். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் பல லட்சம் மக்கள் வந்து மாசிப்பெருந்திருவிழாவில் கலந்து கொள்வார்கள். மாசிப் பெருந்திரு விழாவின் முன்னோட்டமாக ஆண்டின் தொடக்க முதல் திருவிழாவாக ஆண்டுதோறும் ஆயுதபூஜை அடுத்த நாளான விஜயதசமி அன்று மகாநோன்புத்திருவிழா மாசிப்பெருந்திருவிழா வேடபரி போன்றே சிறப்பக நடைபெறும். மகாநோன்பு திருவிழா ஆயுதபூஜைக்கு அடுத்த நாளான விஜயதசமி அன்று நடைபெறுகின்றது. வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவிலில் இரவு முழுவதும் தனித் தனியாக சிறப்பு வழிபாடு நடத்துவார்கள் நான்கு கால பூஜை நடைபெறும். விஜயதசமி அன்று மாலை 5 மணிக்கு பெரியகாண்டியம்மன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் கம்பீரமாக பொன்னர் அம்பு ஏந்தியபடி அமர்ந்திருக்க குதிரை பூசாரி மாரியம்மன் குதிரை வாகனத்தில் பொன்னருடன் வர இளைஞர்கள் கூட்டம் சுமந்து செல்வார்கள் யானை வாகனத்தில் பெரியகண்டியம்மன் அமர்ந்து வர பெரியபூசாரி முத்து யானை வாகனத்தில் பெரியக்காண்டியம்மனுடன் யானை வாகனம் வரும் வீ.பூசாரிபட்டி கிராமத்தில் ஒரு பகுதியில் வீரமலை சோம்பாசி பொடிமட்டை முனியப்பன், கொட்டு தங்கவேல், ஆகியோர் தோட்டங்களின் அருகில் உள்ள இடத்தில் வாழைமரத்தில் குதிரை வாகனத்தில் வரும் பொன்னர் அம்புஎய்யும் வேடபரி நிகழ்ச்சி நடைபெறும். மகா நோன்பு விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பட்டையதாரர்கள் கிராம மக்கள் நல்லாம் பிள்ளை ஊராட்சியின் சார்பிலும் செய்து வருகின்றனர்

வாய்க்கால் அமைத்த காலிங்கராயர்!

சபதத்தை நிறைவேற்றுவதற்காகத் தான் கட்டிய கால்வாயில் இருந்து இன்றுவரை தண்ணீரைப் பயன்படுத்தாமல் சபதத்தை நிறைவேற்றி வருகின்றனர் காலிங்கராயர் பரம்பரையினர். பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் அரண்மனை என்றாலே சபதத்தை நிறைவேற்றுவதற்காகத் தான் கட்டிய கால்வாயில் இருந்து இன்றுவரை தண்ணீரைப் பயன்படுத்தாமல் சபதத்தை நிறைவேற்றி வருகின்றனர் காலிங்கராயர் பரம்பரையினர். பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் அரண்மனை என்றாலே சிறு குழந்தையும் கை காட்டும் இடமாக உள்ளது 5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் அரண்மனை. காலிங்கராயர் வழியில் வந்த இந்த ஜமீனின் காலம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன். கொங்கு நாட்டை ஆண்ட வீரபாண்டியனின் படையில் சேர்ந்த லிங்கையன், தன் மதிநுட்பத்தாலும், தளபதியாகிப் பதவி உயர்வுடன் அமைச்சராகி காலிங்கராயன் என்ற உயர் பட்டத்தைப் பெற்றதாக ஒரு கருத்து நிலவுகிறது. அத்தை மகளைப் பெண் கேட்டுச் சென்ற போது மாமாவின் பேச்சால் மனமுடைந்து, தன் பகுதியை தண்ணீர் வசதியுடன் கூடிய நன்செய் நிலமாக மாற்றுவேன் என்று உறுதி பூண்ட காலிங்கராயன், வாய்க்கால் வெட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் பலப்பல. அதற்கு எதிர்ப்புகளும் அதிக அளவில் இருந்தன. கால்வாய் வெட்டுவதால் காலிங்கராயனுக்குத்தான் லாபம் அதிகம் என்று உறவினர்கள் கூறியதையும் பொருட்படுத்தாமல் கால்வாய் வெட்டப்பட்டது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட அந்தக் கால்வாய் இப்போதும் ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் கால்வாய் என்ற பெயருடன் ஓடுகிறது. கி.பி. 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுமார் 60 மைல் நீளமுள்ள இந்தக் கால்வாய் சுமார் 12 ஆண்டுகளில் முடிக்கப்பட்டது. இதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளைப் பாண்டிய மன்னன் உதவியுடன் காலிங்கராயன் முறியடித்தான் என்றும் கூறப்படுகிறது. பவானியில் அணை கட்டி அங்கிருந்து கொடுமுடி நொய்யல் ஆறுவரை சுமார் 17,000 ஏக்கர் பயனுறும் வகையில் கால்வாய் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. கால்வாயும் அணையும் கட்டிய தொழில் நுட்பம் இன்றும் பொதுப்பணித்துறையினரைப் பிரமிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தக் கால்வாய் அமைப்பு அனைத்திலும் எந்த இயந்திரமும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கால்வாய் வெட்டும் பணிக்காக பாசனப் பகுதி நிலங்களுக்கு அப்போதே தீர்வை வசூலிக்கப்பட்டது. கால்வாய் வெட்டி முடிக்கப்பட்ட பின் தன் குடும்பத்தார் அனைவருடனும் அங்கிருந்து வெளியேறி ஜமீன் ஊத்துக்குளிக்கு வந்து பாண்டிய மன்னனின் உதவியுடன் ஆட்சி செய்தார் காலிங்கராயர். தான் கட்டிய வாய்க்கால் நீரைத் தன்னுடைய சந்ததியினர் யாரும் பயன்படுத்த மாட்டார்கள் என்று அன்று கொடுத்த வாக்குறுதியை காலிங்கராயரின் வாரிசுகள் இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர். இக்கால்வாய்ப் பணிகளை 1800-ல் புக்கானர் பாதிரியார் மிகச் சிறந்த முன்னோடித் திட்டம் என்று பாராட்டியுள்ளார். இவர்கள் கொடுத்த நிலத்தில் ஈரோட்டில் இன்றும் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையான காலிங்கராயன் இல்லம் கம்பீரமாக வீற்றுள்ளது. இப்போதைய ஜமீன் ஊத்துக்குளியில் காலிங்கராயன் பரம்பரையினர் 10 ஊர்களுக்கு அதாவது ஊத்துக்குளி, முத்தூர், போடிபாளையம், குளத்தூர், சேர்வைக் காரன்பாளையம், ராசிசெட்டிபாளையம், ஐயம்பாளையம், நல்லூத்துக்குளி, குமாரபாளையம், திம்மங்குத்து ஆகிய ஊர்களுக்கு வரி வசூல் செய்யும் உரிமையைப் பெற்றிருந்தனர். ஊத்துக்குளி அருகே அகத்தூர் அம்மன் கோயில் என்ற கோயிலையும் காலிங்கராயன் உருவாக்கினார். காலிங்கராயன் பரம்பரையில் 31-வது தலைமுறையைச் சேர்ந்த முத்துசாமி காலிங்கராயர் தனது எல்லையை விரிவுபடுத்தினார். 1913-ல் முத்துராமலிங்க காலிங்கராயரின் தாத்தாவுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் துரை, திவான்பகதூர் பட்டம் வழங்கினார். புதுதில்லியில் நடந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு கோவை மாவட்டப் பிரதிநிதியாகச் சென்று வந்தார். பயிருக்கு விதிக்கப்படும் வரிகள், ஜமீன் சார்பில் அரசுக்குக் கட்ட வேண்டிய வரி உள்ளிட்ட அனைத்துக்கும் கணக்கு வழக்குகள் உண்டு. கடந்த 1911-1912-ம் ஆண்டில் ஜமீன் ஊத்துக்குளியின் நிதி நிலை அறிக்கை ரூ.43 ஆயிரத்து 803-க்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அப்போது ஜமீன் ஊத்துக்குளிக்கு உள்பட்ட மொத்த மக்கள் தொகை 8367. காலிங்கராயர் மற்றும் சமத்தூர் ஜமீன்களுக்கு இடையில் பெண்ணெடுத்துப் பெண் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. இப்போது ஜமீன் ஊத்துக்குளி அரண்மனையில் அகத்தூர் அருண்குமார் காலிங்கராயர் வசித்து வருகிறார். அவருடைய சகோதரர்கள் கிருஷ்ணராஜ் காலிங்கராயர், வெற்றிவேல் காலிங்கராயர், மோகன்குமார் காலிங்கராயர் ஆகியோர் வெளியூர்களில் வசிக்கின்றனர். அருண்குமார் காலிங்கராயரின் கட்டுப்பாட்டில் உள்ள அரண்மனையில் ஒரு பகுதி மட்டும் இப்போதும் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது. அரண்மனைக்குள் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது பாடம் செய்யப்பட்ட சிறுத்தையும், கரடியும்தாம். ஊத்துக்குளி ஜமீன் முத்திரை இரு தந்தங்களுக்கு நடுவில் வைக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்திய ஜமீன் முத்திரை, தங்கக் காசுகள், அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட காசுகள், பல்வேறு வகையான மான் கொம்புகளுடன் கூடிய பழங்காலக் கத்திகள், பாடம் செய்து வைக்கப்பட்ட யானையின் துதிக்கை, பல்வேறு வகையான மான் கொம்புகள், குத்தீட்டிகள், பழங்காலத்தைப் பறைசாற்றும் கார், ஜமீன்தாரரின் மாட்டு வாகனங்கள், ஆங்கிலேயர் வழங்கிய சிம்மாசன இருக்கைகள், 12-8-1897-ல் சென்னை அரசாங்கத்திடம் இருந்து வழங்கப்பட்ட சான்றிதழ்கள் ஆகியவை இன்றும் மெருக்குலையாமல் பாதுகாக்கப்படுகின்றன. அகத்தூர் அம்மனை கோயிலில் இன்றும் நவராத்திரி பூஜைகள் சிறப்பாக நடந்து வருகின்றன. அந்தக் காலத்தில் எடைக்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் இன்னமும் அப்படியே வைக்கப்பட்டுள்ளன. இப்போது அரண்மனையில் வசித்து வரும் அருண்குமார் காலிங்கராயர் கூறியது: அப்போது கட்டப்பட்ட காலிங்கராயன் கால்வாயில் இருந்து கிடைக்கும் தண்ணீரை இப்போதும் எங்கள் பரம்பரையினர் பயன்படுத்துவதில்லை. இப்போதும் அகத்தூர் அம்மன் கோயிலில் பூஜை வழக்கம்போல நடந்து வருகிறது. எங்களால் முடிந்த அளவுக்கு இந்நிலை தொடரும் என்று தெரிவித்தார்.

ஈரோடு காலிங்கராயன் கால்வாய் வளைந்து செல்வது ஏன்?

காவிரியாற்றின் கிளை நதிகள் பவானி, நொய்யல் ஆகியன. பவானியையும், நொய்யலையும் இணைப்பது காலிங்கராயன் கால்வாய். இந்த கால்வாயை வெட்டியதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. அதே சமயத்தில் இந்த கால்வாய் வெட்டி கொண்டு செல்லப்பட்டதில் உள்ள தொழில் நுட்பம் பலர் அறியாத விஷயம். பவானி அணை கடல் மட்டத்தில் இருந்து 534 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் 412 அடி உயரம் கொண்டது. பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு. ஈரோடு அருகே வெள்ளோடு அடுத்த கனகபுரத்தில் சாத்தை குலத்தில் பிறந்தவன் லிங்கைய கவுண்டர். பாண்டியன் வீரபாண்டிய மாறவர்மானால் காலிங்கராயன் என பட்டம் வாங்கினான். 12 ஆண்டுகள் தவமிருந்து அணையை கட்டியதால் கலிங்கராயன் என அழைக்கப்பட்டான். கலிங்கம் என்றால் அணை என்று பொருள்.ராயர் என்பது ஆழும் தகுதி உடைய வம்சத்துக்கு கொடுக்க படும் பட்டம் அதனால் கலிங்கராயன் என அழைக்கப்பட்டதாக வரலாறு. வாய்க்கால் நேராக கொண்டு சென்றால் அதிகமான வயலுக்கு பாயாமல் நேராக விரைந்து ஓடி நொய்யலில் விழுந்து விடும். எனவே நீர் தேங்கி நின்று வயலுக்கு பாய்ந்து நிலம் வளப்படுத்துவதற்காகவும், நீரின் வேகத்தை குறைத்து கரைக்கு வெள்ளத்தினால் ஏற்படும் அழிவுகளை தடுப்பதற்காகவும், மேட்டுபாங்கான இடத்திலேயே தொடர்ந்து செல்கிறது. பாய்ந்தோடும் தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்த காலிங்கராயன் கையாண்ட யுக்தி இப்போதைய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு.

கவுண்டர் பட்டத்தின் உரிமையாலர்கல்..

விவசாயத்தை குலதொளிலாக கொண்ட கொங்கு மண்டலத்தார், காமிண்டர் (காட்டை அழித்து நாடு/விவசாயம் செய்தோர்) என்று மருவி கவுண்டர் ஆனது. கொங்கு வெள்ளாள கவுன்டரே அவர்கள்.. வேட்டை ஆடுவதை குலதொளிலாக கொண்ட வேட்டுவர்களும், காவல்,போர் தொழிலை கொண்ட வன்னியருக்கும் கவுண்டர் எனும் சொல்லே பொருந்தாது. நாட்டு கவுண்டர்கள் என்போர் கொங்கு வெள்ளாள கவுண்டரில் பெரும்பான்மையான கண்ண குலத்தவர்கள், திருச்செங்கோட்டு(மோரூர் நாடு) நாட்டை ஆட்சி செய்தவர்கள் முதலாக தொடங்கியது.. பின் அவர்களுக்கு பெண் கொடுத்து பெண் எடுத்த ராசிபுரம் விழிய குலத்தினர், ஏழூர் செல்லன் குலதினரும் நாட்டு கவுண்டர் என அழைக்க பட்டனர். கவுண்டர் என்பது கொ.வே. கவுண்டர்களும் அவர்களில் இருந்து கிளைத்த நாட்டு கவுண்டர், ஊராளி கவுண்டர், நரம்புகட்டி கவுண்டர், முடவாண்டி கவுண்டர் முதலானோரை குறிக்கும்.

கொங்கு வரலாற்றில் கன்ன குலம்

கொங்கு வரலாற்றில் கன்ன குலம் மூன்று நாடுகள் அதன் காணிகள் பதினெட்டு குல கோவில்கள் நான்கு பிரிவுகள் கோட்டை கொத்தளம் 34 தலைமுறை ராஜ்ய பரிபாலனம் என கொங்கு நாட்டின் மிக நீண்ட ஆட்சியை நடத்திய பெருமைமிகு கன்ன குலத்தின் பெரியோர் சிலரை பற்றிய பதிவு. கன்னிவாடி மும்முடி நல்லதம்பி மன்றாடியார் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவிலானது அக்காலத்தில் மிக பிரசித்தம். கொங்கு மக்கள் அனைவரும் பொதுவாக வணங்கும் தெய்வமாகும். அண்ணன்மார் கதை மூலமும் அறியலாம். கோவில் விழா மூவேந்தர்களும் வந்திருந்து சிறப்பு செய்யும் வண்ணம் விமரிசையாக கொண்டாடப்படும். அப்படி ஒரு சிறப்புமிக்க விழா காலத்தில் கன்னிவாடி காணிக்குரிய கன்ன குல கந்தசாமி கவுண்டர் மகன் நல்லதம்பி கவுண்டரும் சென்றிருந்தார். விழாவின் போக்கில் இணக்கத்தோடு இருந்த மூவேந்தருக்கும் கோவிலின் மேல் உள்ள அதிகாரம் குறித்து எல்லை தகராறு ஏற்பட்டது. ஆனால் அதை தீர்த்து வைக்க துணிவோ, திறமையோ எவருக்கும் ஏற்படவில்லை. மூன்றில் ஒரு அரசனுக்கு பாதகமாக பேசிவிட்டாலும் தலை தப்பாது என்ற பயம். பஞ்சாயத்து செய்வதில் வல்லவரான நல்லதம்பி கவுண்டர் முன் வந்தார். மூவேந்தரையும் தீர்ப்புக்கு கட்டுப்படும் உறுதியை வாங்கிக்கொண்டு, வாதங்களையும் பிரதிவாதங்களையும் கேட்டறிந்தார். பின்னர் புதிய யோசனையாக மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவிலையே மையமாக வைத்து மூன்று கூறாக வேந்தர்களின் எல்லைகளை வகுத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான தீர்ப்பை கூறினார். அக மகிழ்ந்து போன மூவேந்தர்களும் நல்லதம்பி கவுண்டரின் திறமையை கொண்டாடி அவருக்கு “மும்முடி மன்றாடியார்” என்னும் பட்டத்தோடு கன்னிவாடி ராஜ்ஜிய அதிகாரத்தையும் வழங்கினர். கொங்கு நாட்டு பட்டகாரர்களில் மூவேந்தர்களும் முடி சூட்டிய மும்முடி பட்டம் கன்ன குலத்திற்கே ஆகும். பின்னர் அவர் வழி வந்த ஆட்சியாளர்களுக்கும் மூவேந்தர்ரின் குலகுருக்கள் வந்து முடிசூட்டி வைப்பார்கள். இவ்வளவு பெருமை மிகு ராஜ்ஜியத்தை, கன்ன குல பெண்ணின் சவாலுக்காக கலப்பு மணத்தை எதிர்த்து ராஜ்ஜியம் துறந்து வெளியேறிய மாண்பும் இதே கன்ன குலத்திற்கு சேர்ந்தது. பின்னாளில் பல்லவர்கள் ஆட்சி தலைதூக்கிய காலத்தில் பள்ளியர் கை ஓங்கியது. அந்த சமயத்தில் ஒரு நாள் வன்னிய பெண்ணுக்கும் கன்ன குல பெண்ணிற்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், வன்னியபெண் “உன்னை என் அண்ணனுக்கு கட்டி வைக்கிறேன” என்று சபதமிட, “எங்க வீட்டு நாயை உன் அண்ணனுக்கு கட்டி வைப்பேன்” என்று எதிர்சபதமிட்டார் கன்ன குல பெண். தன் குடிவண்ணான், நாவிதர், தோட்டி துணையோடு சபதத்தை நிறைவேற்றி கன்னிவாடியை துறந்து வெளியேறினர் கன்ன குலத்தார். அப்போது பின்தொடர்ந்த பல்லவ-வன்னிய படையை திசை திருப்ப பொற்காசுகளை சிதறி விட்டனர். அதை பொறுக்கி கொண்டு படை திசை மாறியது. அந்த இடமே இன்றைய பொன்பரப்பி. தங்கள் இன பெண்ணின் சபததிற்காகவும், குல மானதிற்காகவும்-பெரும் படையையும் எதிர்த்து செயல் முடித்து முடி துறந்த மாண்பை கொண்டாடியே தீர வேண்டும். சூர்ய காங்கேயன் கன்னிவாடியை விட்டு வெளியேறிய நல்லதம்பி மன்றாடியார் தலைமையிலான கன்ன குலத்தார் பல்வேறு காணிகளில் குடியமர்ந்தனர். அந்த பயண நாட்களின் ஒரு விடியற்காலை பொழுதில் நல்லதம்பி மன்றாடியார் மனைவிக்கு இளம் சூரியனை போல் ஆண் மகவு பிறந்தது. சூர்யகாங்கேயன் என்று பெயரிட்டனர். சூர்யகாங்கேயனின் அப்பிச்சிமார் (மோரூர்-தற்போதைய திருச்செங்கோடு) கீழக்கரை பூந்துறை நாட்டு ஆந்தை குலத்தோர். நல்லதம்பி மன்றாடியாரும் திருச்செங்கோடு பகுதியில் குடியமர்ந்தார். (இன்றும் கன்ன குலத்தாரின் குல கோவில்களை கவனித்தால் கன்னிவாடியில் இருந்து திருச்செங்கோடு வரை வரிசையாக பல கோவில்கள் இருக்கும்). வளர்ந்த சூர்யகாங்கேயன் தனது அப்பிச்சிமாரின் சபையில் சென்று தனக்கென ஒரு காணி வேண்டுமென கேட்டார். அவரின் உறவுகள் அனைவரும் பார்க்க சபைநடுவே “மூவேந்தர் சூட்டி கொடுத்த ராஜ்ஜியத்தையே தொலைத்த உங்களுக்கு காணி ஒரு கேடா..! பறைச்சேரி தான் உங்களுக்கு காணி..” என்று சுடு வார்த்தைகளால் ஏளனம் பேசினர். கூனி குறுகிப்போன சூர்யகாங்கேயன் ஆங்காரமும் ஆற்றாமையும் தூக்கத்தை தொலைக்க, அங்கிருக்க முடியாது, வீரபாண்டிய மன்னனின் படையில் சேர்ந்தார். என்ன செய்வது கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள் அல்லவா..!. தனது வீரம் மற்றும் அறிவுதிறத்தால் வெகு விரைவில் தலைமை பொறுப்புக்கு இளம் வயதிலேயே வந்தார். அந்த சமயத்தில் பாண்டியனாலும் தோற்கடிக்க முடியாதவாரு வானாதிராயன் என்னும் வன்னிய மன்னன் (இன்றைய திருவண்ணாமலை) பகுதியில் கோட்டை கொத்தளத்தொடு விளங்கினான். மன்னன் தொடர் தோல்வியால் மனம் உடைந்து வெதும்பி போய் இருந்தார். இதை சவாலாக ஏற்று சிறிய படையோடு கொங்குச்சிங்கம் கிளம்பியது. ஏற்கனவே வன்னியரால் தங்கள் பூர்வீக நாட்டை இழந்த கோபத்தையும் இதில் காட்டினார். கோட்டையை நன்கு நோட்டம விட்டார். பின்னர் பண்டிகை நாளில் கோட்டையின் தளபதிகள் வெளியே வந்தபோது ஒரு குழு உட்புகுந்து கோட்டையையும் ஒரு குழு வெளியில் இருந்த வீரர்களையும் கொரில்லா போர் முறையால் அழித்து வானாதிராயனை உயிரோடு பிடித்து வந்து வீரபாண்டியன் முன் நிறுத்தினார். சேகுவேரா, சத்ரபதி சிவாஜி, தீரனார், மாசேதுங், ஹோசிமின் போன்றோருக்கு முன்னரே சூர்யகாங்கேயன் கொரில்லா யுத்த முறையை கச்சிதமாக பயன்படுத்தியது நினைவில் வைக்க வேண்டியது. வெற்றி மகிழ்ச்சி மனதை நிறைத்து விழியை நிரப்ப, பாண்டிய மன்னன சூர்யகாங்கேயனின் வீரத்துக்கும் அறிவுக்கும் ரசிகனானான். “என்ன வேண்டுமோ, கேள் சூர்யகாங்கேயா” என கேட்க, தன் உள்ளத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை கொட்டினார். பாண்டிய மன்னனும் ‘இம்முடி காங்கேய மன்றாடி’ என்று பெயரிட்டு மோரூர் நாட்டின் பட்டத்தை சூர்யகாங்கேயனுக்கு அளித்தான். மோரூர் சபையில் கூனி குறுகி வெளியேறியவர் அதே சபைக்கு அரசனாக திரும்பினார். மனதின் தீ பிரளயமாக மாற மோரூர் ரத்தகாடானாது. பைரவ உக்கிரத்தோடு ருத்திர தாண்டவம் ஆடினார் சூர்யா காங்கேயன். மாமன்மார்களின் கோட்டை,கொடி,பண்ணை,வீடு,மடம்,கோவில் என அனைத்தயும் உடைத்து அழித்து சர்வ நிர்மூலமாக்கி கோர தாண்டவம் ஆடினார். பதறியும் சிதறியும் தங்களின் தவறை உணர்ந்து நாட்டை விட்டு வெளியேறினர். அவர்களில் சிலர் தங்களின் குல அடையாளத்தை துறப்பதாக வாக்களித்து பிறழாந்தை (ஆந்தையில் இருந்து பிரிந்தது, பொருள்தந்த என்று திரிந்தது) என்று பெயர்பெற்று மாறினர். இன்றும் ஆந்தை குலதினர் பொருள்தந்த குலதினர் பெண் கொள்வினை கொடுப்பினை கிடையாது (பங்காளிகள் என்பதால்). மோரூர் நாட்டை ஆண்ட சூர்யகாங்கேயன் பின்னாளில் தனது முன்னோரின் கன்னிவாடி ராஜ்ஜியத்தையும் மீட்டு அங்கு திரும்பினார். அவரின் வழிவந்தவர்கள் மோரூர் நாட்டின் ஆட்சி பொறுப்பை கவனித்து வந்தார்கள். முளசி நாடும் முளசி காங்கேயரும் பின்னாளில் கிளைத்தார்கள். மோரூர் காங்கேயர்கள் 34 தலைமுறைகளாக ஆட்சி செய்தனர். கொங்கு நாட்டின் மிக நீண்ட பட்டம் மோரூர் பட்டம்தான். திருசெங்கோட்டு மலை கோவிலுக்கு பெரும்பணிகள் செய்தார்கள். கொங்கு தேசத்தின் அனைத்து நாட்டாரும் (நிர்வாக பொறுப்பின் பெயர்) கொங்கு வேளாளர் மரபை தழுவி இருக்க சூர்யா காங்கேயர் திரும்பிய கன்னிவாடி கன்ன குலமும் கொங்கு வேளாளர் மரபை தழுவி இருக்க, மோரூர் முளசி பட்டங்கள் மட்டும் தங்களை நாட்டு கவுண்டர் என்று வேறுபடுத்தி காட்ட துவங்கினர். அவர்களுக்கு பெண் கொடுத்து பெண் எடுத்த ஏழூர் (செல்லன்) ராசிபுரம் (விழியன்) நாட்டாரும் இந்த பிரிவினையில் இணைந்தனர். இன்றும் இந்த பேதம் உள்ளது. கொங்கு வேளாளருக்கும் நாட்டு கவுண்டர்களும் கொள்வினை கொடுப்பினை கிடையாது. கொங்கு வேளாளரின் பிற நாட்டர்களுடனும் கிடையாது. பொப்பன்ன காங்கேயன் மோரூர் நாட்டின் கிளை நாடு முளசி நாடு. இதற்கும் கன்ன குல காங்கேயர் தான் பட்டகாரர்கள். முளசி காங்கேயர் இனிமையிலும் விருந்தோம்பலிளும் சிறந்தவர்கள். இந்த மரபில் வந்தவர் பொப்பண்ண காங்கேயர். தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரை ஆதரித்து காத்தவர்.அடியார்க்கு நல்லார் தனது நூலில், “பொப்பண்ண காங்கேய கோன் இட்ட சோற்று கொழுப்பல்லவோ என்னை முத்தமிழுக்கும் உரை எழுத செய்வித்தது” என்கிறார். மதுரை அரசர்களோடு நெருங்கிய உறவை பேணி வந்தார்கள். மதுரையில் பஞ்சம் வந்த காலத்தில் பாண்டியன் தனது படையின் ஒரு பகுதியை முளசிக்கு அனுப்பினான். பின்னாளில் அதனை நினைவு கூர்ந்து பாண்டியன் மரியாதை செய்வித்தான். முத்துசாமி கவுண்டர் கன்ன குல தோன்றலான முத்துசாமி கவுண்டருக்கு மூன்று மனைவிகள். அவர் உயிர் நீத்த போது பதிவிரதைகள் மூவரும் உடன்கட்டை ஏறினர். அவர்கள் மூவரையும் ஓர் உருவாக வீரமாத்தி அம்மனாக கொங்கு மக்கள் வழிபடுகிறார்கள். தீப்பாய்ந்த அம்மன் என்று ராசிபுர வட்டார மக்கள் வணங்குவதும் இதே அம்மன்தான்.

கொங்கு வரலாற்றில் கன்ன குலம்

கொங்கு வரலாற்றில் கன்ன குலம் மூன்று நாடுகள் அதன் காணிகள் பதினெட்டு குல கோவில்கள் நான்கு பிரிவுகள் கோட்டை கொத்தளம் 34 தலைமுறை ராஜ்ய பரிபாலனம் என கொங்கு நாட்டின் மிக நீண்ட ஆட்சியை நடத்திய பெருமைமிகு கன்ன குலத்தின் பெரியோர் சிலரை பற்றிய பதிவு. கன்னிவாடி மும்முடி நல்லதம்பி மன்றாடியார் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவிலானது அக்காலத்தில் மிக பிரசித்தம். கொங்கு மக்கள் அனைவரும் பொதுவாக வணங்கும் தெய்வமாகும். அண்ணன்மார் கதை மூலமும் அறியலாம். கோவில் விழா மூவேந்தர்களும் வந்திருந்து சிறப்பு செய்யும் வண்ணம் விமரிசையாக கொண்டாடப்படும். அப்படி ஒரு சிறப்புமிக்க விழா காலத்தில் கன்னிவாடி காணிக்குரிய கன்ன குல கந்தசாமி கவுண்டர் மகன் நல்லதம்பி கவுண்டரும் சென்றிருந்தார். விழாவின் போக்கில் இணக்கத்தோடு இருந்த மூவேந்தருக்கும் கோவிலின் மேல் உள்ள அதிகாரம் குறித்து எல்லை தகராறு ஏற்பட்டது. ஆனால் அதை தீர்த்து வைக்க துணிவோ, திறமையோ எவருக்கும் ஏற்படவில்லை. மூன்றில் ஒரு அரசனுக்கு பாதகமாக பேசிவிட்டாலும் தலை தப்பாது என்ற பயம். பஞ்சாயத்து செய்வதில் வல்லவரான நல்லதம்பி கவுண்டர் முன் வந்தார். மூவேந்தரையும் தீர்ப்புக்கு கட்டுப்படும் உறுதியை வாங்கிக்கொண்டு, வாதங்களையும் பிரதிவாதங்களையும் கேட்டறிந்தார். பின்னர் புதிய யோசனையாக மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவிலையே மையமாக வைத்து மூன்று கூறாக வேந்தர்களின் எல்லைகளை வகுத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான தீர்ப்பை கூறினார். அக மகிழ்ந்து போன மூவேந்தர்களும் நல்லதம்பி கவுண்டரின் திறமையை கொண்டாடி அவருக்கு “மும்முடி மன்றாடியார்” என்னும் பட்டத்தோடு கன்னிவாடி ராஜ்ஜிய அதிகாரத்தையும் வழங்கினர். கொங்கு நாட்டு பட்டகாரர்களில் மூவேந்தர்களும் முடி சூட்டிய மும்முடி பட்டம் கன்ன குலத்திற்கே ஆகும். பின்னர் அவர் வழி வந்த ஆட்சியாளர்களுக்கும் மூவேந்தர்ரின் குலகுருக்கள் வந்து முடிசூட்டி வைப்பார்கள். இவ்வளவு பெருமை மிகு ராஜ்ஜியத்தை, கன்ன குல பெண்ணின் சவாலுக்காக கலப்பு மணத்தை எதிர்த்து ராஜ்ஜியம் துறந்து வெளியேறிய மாண்பும் இதே கன்ன குலத்திற்கு சேர்ந்தது. பின்னாளில் பல்லவர்கள் ஆட்சி தலைதூக்கிய காலத்தில் பள்ளியர் கை ஓங்கியது. அந்த சமயத்தில் ஒரு நாள் வன்னிய பெண்ணுக்கும் கன்ன குல பெண்ணிற்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், வன்னியபெண் “உன்னை என் அண்ணனுக்கு கட்டி வைக்கிறேன” என்று சபதமிட, “எங்க வீட்டு நாயை உன் அண்ணனுக்கு கட்டி வைப்பேன்” என்று எதிர்சபதமிட்டார் கன்ன குல பெண். தன் குடிவண்ணான், நாவிதர், தோட்டி துணையோடு சபதத்தை நிறைவேற்றி கன்னிவாடியை துறந்து வெளியேறினர் கன்ன குலத்தார். அப்போது பின்தொடர்ந்த பல்லவ-வன்னிய படையை திசை திருப்ப பொற்காசுகளை சிதறி விட்டனர். அதை பொறுக்கி கொண்டு படை திசை மாறியது. அந்த இடமே இன்றைய பொன்பரப்பி. தங்கள் இன பெண்ணின் சபததிற்காகவும், குல மானதிற்காகவும்-பெரும் படையையும் எதிர்த்து செயல் முடித்து முடி துறந்த மாண்பை கொண்டாடியே தீர வேண்டும். சூர்ய காங்கேயன் கன்னிவாடியை விட்டு வெளியேறிய நல்லதம்பி மன்றாடியார் தலைமையிலான கன்ன குலத்தார் பல்வேறு காணிகளில் குடியமர்ந்தனர். அந்த பயண நாட்களின் ஒரு விடியற்காலை பொழுதில் நல்லதம்பி மன்றாடியார் மனைவிக்கு இளம் சூரியனை போல் ஆண் மகவு பிறந்தது. சூர்யகாங்கேயன் என்று பெயரிட்டனர். சூர்யகாங்கேயனின் அப்பிச்சிமார் (மோரூர்-தற்போதைய திருச்செங்கோடு) கீழக்கரை பூந்துறை நாட்டு ஆந்தை குலத்தோர். நல்லதம்பி மன்றாடியாரும் திருச்செங்கோடு பகுதியில் குடியமர்ந்தார். (இன்றும் கன்ன குலத்தாரின் குல கோவில்களை கவனித்தால் கன்னிவாடியில் இருந்து திருச்செங்கோடு வரை வரிசையாக பல கோவில்கள் இருக்கும்). வளர்ந்த சூர்யகாங்கேயன் தனது அப்பிச்சிமாரின் சபையில் சென்று தனக்கென ஒரு காணி வேண்டுமென கேட்டார். அவரின் உறவுகள் அனைவரும் பார்க்க சபைநடுவே “மூவேந்தர் சூட்டி கொடுத்த ராஜ்ஜியத்தையே தொலைத்த உங்களுக்கு காணி ஒரு கேடா..! பறைச்சேரி தான் உங்களுக்கு காணி..” என்று சுடு வார்த்தைகளால் ஏளனம் பேசினர். கூனி குறுகிப்போன சூர்யகாங்கேயன் ஆங்காரமும் ஆற்றாமையும் தூக்கத்தை தொலைக்க, அங்கிருக்க முடியாது, வீரபாண்டிய மன்னனின் படையில் சேர்ந்தார். என்ன செய்வது கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள் அல்லவா..!. தனது வீரம் மற்றும் அறிவுதிறத்தால் வெகு விரைவில் தலைமை பொறுப்புக்கு இளம் வயதிலேயே வந்தார். அந்த சமயத்தில் பாண்டியனாலும் தோற்கடிக்க முடியாதவாரு வானாதிராயன் என்னும் வன்னிய மன்னன் (இன்றைய திருவண்ணாமலை) பகுதியில் கோட்டை கொத்தளத்தொடு விளங்கினான். மன்னன் தொடர் தோல்வியால் மனம் உடைந்து வெதும்பி போய் இருந்தார். இதை சவாலாக ஏற்று சிறிய படையோடு கொங்குச்சிங்கம் கிளம்பியது. ஏற்கனவே வன்னியரால் தங்கள் பூர்வீக நாட்டை இழந்த கோபத்தையும் இதில் காட்டினார். கோட்டையை நன்கு நோட்டம விட்டார். பின்னர் பண்டிகை நாளில் கோட்டையின் தளபதிகள் வெளியே வந்தபோது ஒரு குழு உட்புகுந்து கோட்டையையும் ஒரு குழு வெளியில் இருந்த வீரர்களையும் கொரில்லா போர் முறையால் அழித்து வானாதிராயனை உயிரோடு பிடித்து வந்து வீரபாண்டியன் முன் நிறுத்தினார். சேகுவேரா, சத்ரபதி சிவாஜி, தீரனார், மாசேதுங், ஹோசிமின் போன்றோருக்கு முன்னரே சூர்யகாங்கேயன் கொரில்லா யுத்த முறையை கச்சிதமாக பயன்படுத்தியது நினைவில் வைக்க வேண்டியது. வெற்றி மகிழ்ச்சி மனதை நிறைத்து விழியை நிரப்ப, பாண்டிய மன்னன சூர்யகாங்கேயனின் வீரத்துக்கும் அறிவுக்கும் ரசிகனானான். “என்ன வேண்டுமோ, கேள் சூர்யகாங்கேயா” என கேட்க, தன் உள்ளத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை கொட்டினார். பாண்டிய மன்னனும் ‘இம்முடி காங்கேய மன்றாடி’ என்று பெயரிட்டு மோரூர் நாட்டின் பட்டத்தை சூர்யகாங்கேயனுக்கு அளித்தான். மோரூர் சபையில் கூனி குறுகி வெளியேறியவர் அதே சபைக்கு அரசனாக திரும்பினார். மனதின் தீ பிரளயமாக மாற மோரூர் ரத்தகாடானாது. பைரவ உக்கிரத்தோடு ருத்திர தாண்டவம் ஆடினார் சூர்யா காங்கேயன். மாமன்மார்களின் கோட்டை,கொடி,பண்ணை,வீடு,மடம்,கோவில் என அனைத்தயும் உடைத்து அழித்து சர்வ நிர்மூலமாக்கி கோர தாண்டவம் ஆடினார். பதறியும் சிதறியும் தங்களின் தவறை உணர்ந்து நாட்டை விட்டு வெளியேறினர். அவர்களில் சிலர் தங்களின் குல அடையாளத்தை துறப்பதாக வாக்களித்து பிறழாந்தை (ஆந்தையில் இருந்து பிரிந்தது, பொருள்தந்த என்று திரிந்தது) என்று பெயர்பெற்று மாறினர். இன்றும் ஆந்தை குலதினர் பொருள்தந்த குலதினர் பெண் கொள்வினை கொடுப்பினை கிடையாது (பங்காளிகள் என்பதால்). மோரூர் நாட்டை ஆண்ட சூர்யகாங்கேயன் பின்னாளில் தனது முன்னோரின் கன்னிவாடி ராஜ்ஜியத்தையும் மீட்டு அங்கு திரும்பினார். அவரின் வழிவந்தவர்கள் மோரூர் நாட்டின் ஆட்சி பொறுப்பை கவனித்து வந்தார்கள். முளசி நாடும் முளசி காங்கேயரும் பின்னாளில் கிளைத்தார்கள். மோரூர் காங்கேயர்கள் 34 தலைமுறைகளாக ஆட்சி செய்தனர். கொங்கு நாட்டின் மிக நீண்ட பட்டம் மோரூர் பட்டம்தான். திருசெங்கோட்டு மலை கோவிலுக்கு பெரும்பணிகள் செய்தார்கள். கொங்கு தேசத்தின் அனைத்து நாட்டாரும் (நிர்வாக பொறுப்பின் பெயர்) கொங்கு வேளாளர் மரபை தழுவி இருக்க சூர்யா காங்கேயர் திரும்பிய கன்னிவாடி கன்ன குலமும் கொங்கு வேளாளர் மரபை தழுவி இருக்க, மோரூர் முளசி பட்டங்கள் மட்டும் தங்களை நாட்டு கவுண்டர் என்று வேறுபடுத்தி காட்ட துவங்கினர். அவர்களுக்கு பெண் கொடுத்து பெண் எடுத்த ஏழூர் (செல்லன்) ராசிபுரம் (விழியன்) நாட்டாரும் இந்த பிரிவினையில் இணைந்தனர். இன்றும் இந்த பேதம் உள்ளது. கொங்கு வேளாளருக்கும் நாட்டு கவுண்டர்களும் கொள்வினை கொடுப்பினை கிடையாது. கொங்கு வேளாளரின் பிற நாட்டர்களுடனும் கிடையாது. பொப்பன்ன காங்கேயன் மோரூர் நாட்டின் கிளை நாடு முளசி நாடு. இதற்கும் கன்ன குல காங்கேயர் தான் பட்டகாரர்கள். முளசி காங்கேயர் இனிமையிலும் விருந்தோம்பலிளும் சிறந்தவர்கள். இந்த மரபில் வந்தவர் பொப்பண்ண காங்கேயர். தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரை ஆதரித்து காத்தவர்.அடியார்க்கு நல்லார் தனது நூலில், “பொப்பண்ண காங்கேய கோன் இட்ட சோற்று கொழுப்பல்லவோ என்னை முத்தமிழுக்கும் உரை எழுத செய்வித்தது” என்கிறார். மதுரை அரசர்களோடு நெருங்கிய உறவை பேணி வந்தார்கள். மதுரையில் பஞ்சம் வந்த காலத்தில் பாண்டியன் தனது படையின் ஒரு பகுதியை முளசிக்கு அனுப்பினான். பின்னாளில் அதனை நினைவு கூர்ந்து பாண்டியன் மரியாதை செய்வித்தான். முத்துசாமி கவுண்டர் கன்ன குல தோன்றலான முத்துசாமி கவுண்டருக்கு மூன்று மனைவிகள். அவர் உயிர் நீத்த போது பதிவிரதைகள் மூவரும் உடன்கட்டை ஏறினர். அவர்கள் மூவரையும் ஓர் உருவாக வீரமாத்தி அம்மனாக கொங்கு மக்கள் வழிபடுகிறார்கள். தீப்பாய்ந்த அம்மன் என்று ராசிபுர வட்டார மக்கள் வணங்குவதும் இதே அம்மன்தான்.

கொங்கு வேளாளரின் குல (காணி)தெய்வம்

கொங்கு வேளாளரின் குல (காணி)தெய்வம் கொங்கு வேளாளரின் குல தெய்வம் என்பது காளியம்மனின் பல்வேறு வடிவங்கள் தான். நாம் குலதெய்வமாக வணங்கும் காளியம்மன் அல்லாத தெய்வங்கள் நாம் இஷ்டதெய்வமாக ஏற்றுகொண்டவைதான். அதற்கு மிக சிறந்த உதாரணம், நமது மொளசி கன்ன குல சொந்தங்கள் வழிபடும் இளையபெருமாள். முன்னாளில் கன்னிவாடியில் இருந்து வந்து, மோரூர் நாட்டின் ஆட்சிபொறுப்பை பாண்டியர் காலத்தில் பெறப்பட்டது. பின்னர் மோரூர் நாட்டிலிருந்து மொளசி நாடு பிரிந்த போதும், குலதெய்வ வழிபாட்டு கடமை காலத்தில் நடைபெற, ஏற்கனவே வணங்கி வந்த மோரூர் நல்லபுள்ளியம்மன விடுத்து, மொளசி நாட்டில் ஆதி கன்ன குலத்தார் வணங்கி வந்த உஞ்சனை காளியம்மனை குலதெய்வமாக வணங்கி வந்தனர். பின்னர் நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் வைணவம் பெரிதாக பரவியது. மதுரை மன்னர்களின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமான மொளசி கன்ன குலத்தார், நாயக்கர்கள் விருப்பப்படி மொளசி நாட்டில் பெருமாளுக்கு மலைக்கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். இன்று இளையபெருமாளே அவர்கள் குலதெய்வம் என்னும் நிலை வந்துவிட்டது. உஞ்சனை அம்மன் நம் குலதெய்வம் என்பதும், இளையபெருமாள் முன்னோர் வணங்கிய இஷ்ட தெய்வம் என்பதும் உணரப்பட வேண்டும். இவர்கள் மட்டுமின்றி வல்லவராய பெருமாள், சென்றாயபெருமாள் என வைணவ மார்கத்தில் குலதெய்வ வழிபாட்டுக்கு சென்ற நிகழ்வு நாயக்க மன்னர்களின் தூண்டுதலால்/நிர்பந்தத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் என்பதையும் உணரவேண்டும். இதேதான் மணியன் குலத்தார் வணங்கும் நவலடியானுக்கும், குப்பண்ண சாமிக்கும், வெள்ளோடு சாத்தந்தை ராசா கோவிலுக்கும், தென்முகம் சாத்தந்தை-பயிரன் அண்ணன்மார் கோவிலுக்கும் பொருந்தும்.

கரிக்குருவியும் காராள வம்சமும்

கரிக்குருவியும் காராள வம்சமும் விடியற்காலையில் கிராமங்களில் அந்நாளில் கரிக்குருவி வீட்டுமுன் வந்து கத்துமாம். அதன் சத்தம் "ஏர்பூட்! ஏர்பூட்!" என்பது போல் இருக்குமாம். அதாவது விடியற்காலையில் ஏர்பூட்ட நேரம் ஆகிவிட்டது என்பதை நினைவூட்டி எழுப்புமாம். காராள வம்சத்தார் (கொங்கு வெள்ளாளர்) கடமை தவறாது கரிக்குருவி வரும் முன்னரே வயலுக்கு சென்று விடுவார்களாம். அதனால் அக்குருவிக்கு தெரியுமாம், கவுண்டர் வீட்டில் தனக்கு வேலை இருக்காது என்று. அதனால், "காராள வம்சமிது; கரிக்குருவி நாடாது" என்று பெருமையோடு சொல்லுவர்.